tamilnadu

img

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை, ஜூன்.15-  தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டம் சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் சிவக்குமார், அஜய்குமார், மைக்கேல்ராஜ், ராஜா, அருணா, செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் ஏ.ஜெயராஜ், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் எல்.மணிமேகலை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கடந்த ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது சிறை சென்று பணியிடை நீக்கம் செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர் வி.தன்ராஜ், கல்வி மாவட்ட இணைச் செயலாளர் எப்.விஜய், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.விமல்ராஜ் உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி மாநிலத் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் பாராட்டினார். முன்னதாக மாவட்டத் தலைவர் கோ.வள்ளியப்பன் வரவேற்க, மாவட்டச் செயலாளர் ஆ.சந்திரபோஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாவட்டத் துiணைத் தலைவர் செ.ராதாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.