தஞ்சாவூர், ஜூன் 27- பட்டுக்கோட்டை வட்டம் மாளியக்காடு, தொக்காலிக் காடு, மகிழங்கோட்டை கிராமங்களில் அக்னியாற்றில் 5 கி.மீ. நடந்து சென்று மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமை யில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஷ்வரன் ஆகியோர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், மாளி யக்காடு, தொக்காலிக்காடு, மகிழங்கோட்டை ஆகிய கிரா மங்களில் உள்ள அக்னியாற்றில் முறைகேடாக மணல் அள்ளப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அதி விரைவு படையுடன் விரைந்து ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கண்காணிப்பாளரும் சுமார் 5 கிமீ தொலைவுக்கு நடந்து சென்று அக்னியாற்றில் முறை கேடாக மணல் அள்ளப்பட்டுள்ள இடங்களை பார்வை யிட்டனர். அக்னியாற்றில் முறைகேடாக மணல் எடுப்ப வர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், முறை கேடாக மணல் அள்ளப்படும் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளவும் வருவாய்த்துறை, காவல் துறை யினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். ஆய்வின் போது, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பூங்கோதை, பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்கா ணிப்பாளர் கணேசமூர்த்தி, வட்டாட்சியர் அருள் பிரகாசம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.