2-வது சர்வதேச பாரா பேட்மின்டன் போட்டிகள்-2019 அண்மையில் துபாயில் நடைபெற்றன. இதில் கரூர் பரணி வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவி ரக்சனா சிவகுமார் இந்தியா சார்பில் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்றுள்ளார். மாணவி ரக்சனாவை, பரணி பார்க் கல்வி குழும தாளாளர் எஸ்.மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், பரணி வித்யாலயா முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் பாராட்டினர்.