tamilnadu

img

அடிப்படை வசதி கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

அறந்தாங்கி, ஜூலை 10-  புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையா ர்கோவிலை அடுத்த பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டம் செய்தனர்.  குடிதண்ணீர், கழிப்பறைக்குத் தண்ணீர், சேதமடைந்த எலக்ட்ரிக் பொருட்களை சரி செய்ய வேண்டும், கல்லூரி சுற்றுச்சுவரின்றி பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக கல்லூரி வளாகம் இருப்பதால் உடனடியாக சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி புதனன்று மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்தனர். கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.