tamilnadu

img

கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மயிலாடுதுறை, ஜூலை 13- நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஏவிசி கல்லூரியில் கணினியியல் துறையில் 25 ஆண்டுக்கு முன் முதுகலை பட்டம் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு மற்றும் அவர்களை கொண்டு இன்றைய மாணவர்களுக்கு சிறப்பு பணிபட்டறை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடந்தது. கணினியியல் துறை தலைவர் கே.தியாகராஜன் தலைமைவகித்து பேசினார்.  கல்லூரியின் தேர்வு நெறியாளர் சி.எஸ்.ஐயப்பன், பேராசிரியர் டாக்டர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் கே.கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். இதில் ஏவிசி கல்லூரியில் பட்டம் பெற்று தற்போது அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் முன்னாள் மாணவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் மற்றும் இந்நியாவில் உள்ள முன்னனி நிறுவனங்களான டி.சி.எஸ்யின் உதவி மேலாளர் எஸ்.சுந்தர்ராமன்; இன்றைய சூழலில் கணினியின் வளர்ச்சி என்ற தலைப்பிலும் மற்றும் பெங்க ளுர் போஷ் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர்.முத்துவிஜயன், நுன்னிய தகவல் சேகரிப்பின் அவசியம் என்ற தலைப்பிலும் பேசினர். இதற்கான ஏற்பாடுகளை கணினியியல் துறை முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.கீதா செய்திருந்தார்.