tamilnadu

img

சிஐடியுவினர் வாக்குச் சேகரிப்பு சிஐடியுவினர் வாக்குச் சேகரிப்பு

மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் போட்டியிடுகின்றார். அவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று காந்தி மார்க்கெட் பகுதியில் வாக்குச் சேகரித்தனர். மூங்கில், சவுக் தொழிலாளர் சங்க தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமர், சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் ரெங்கராஜன் ஆகியோர் துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரித்தனர்.

;