திருத்துறைப்பூண்டி, ஜூன் 23 - சிஐடியு திருவாரூர் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டம் சனிக்கிழமை திருத்துறைப்பூண்டி சுமங்கலி மண்டபத்தில் துவங்கியது. நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.மாலதி தலைமை வகித்தார். மாநாட்டை நடத்துவது சம்பந்தமாக மாவட்டச் செயலாளர் டி.முருகையன் பேசினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, சிஐடியு நிர்வாகிகள் நா.பாலசுப்பிரமணியன், ஜி.பழனிவேல், எம்.பி.கே.பாண்டியன், பி.என்.லெனின், பி.நடராஜன், நபி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சுப்பிரமணியன், எஸ்.சாமிநாதன், ஒன்றிய செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், சாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஏ.கே.வேலவன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சுர்ஜித் மற்றும் அனைத்து சங்கத்தின் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிஐடியு திருவாரூர் மாவட்ட மாநாட்டு பிரதிநிதியாக மையத் தோழர்கள் உள்பட அனைத்து சங்கங்களிலிருந்தும் 202 உறுப்பினர்கள் பிரதிநிதியாக கலந்து கொள்வார்கள் என முடிவு எடுக்கப்பட்டது.