நாகப்பட்டினம், ஜூன் 16- சி.ஐ.டி.யு. அமைப்பு தினப் பொன் விழாக் கருத்தரங்கம் மற்றும் மாவட்ட 13-வது மாநாடு வரவேற்புக் குழுக் கூட்டம், நாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் பி.ஜீவா தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்டத் துணைத் தலைவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, சி.ஐ.டி.யு. மாநிலத் துணைத் தலைவர் கே.விஜயன் ஆகியோர் கருத்துரையாற்றினர். தொடர்ந்து மாவட்ட 13-வது மாநாடு வரவேற்பு அமைப்புக் குழுக்கூட்டம் பி.ஜீவா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சீனி.மணி மாவட்ட மாநாடு பற்றி விளக்கவுரையாற்றினார். மாவட்ட சி.ஐ.டி.யு. 13 வது மாநாடு, ஜூலை-20 அன்று, மயிலாடுதுறையில் நடைபெறும். மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவராக விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், வரவேற்புக் குழுச் செயலாளராக எம்.கலைச் செல்வன், பொருளாளராக ஆர்.ரவீந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வரவேற்புக் குழு உறுப்பினர்களாக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் த.லதா, சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் பி.ஜீவா, மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.வி.ஆர். ஜீவானந்தம், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் டி.கணேசன், ஓய்வூதியர் சங்கத் தெற்கு மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி, வடக்கு மாவட்டச் செயலாளர் வ.பழனிவேலு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ப.மாரியப்பன் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள், சு.மணி, எஸ்.ஆர்.ராஜேந்திரன், ஏ.பஞ்சநாதன், ஏ.சிவனருட்செல்வன், எஸ்.வி.செல்வக்குமார், ஆர்.ராஜேஸ்வரன், எஸ்.வி.செல்வக்குமார், சி.பாலையா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.