தரங்கம்பாடி, ஆக.26- நாகை மாவட்டம் பொறையாறு அருகே காட்டுசேரி விளையாட்டரங்கில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான போட்டிகளில் தரங்கம்பாடி வட்டத்தை சேர்ந்த ஏராளமான பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் திருக்கடையூர் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டியில் கலந்து கொண்டு அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றனர். சாதனை மாணவர்களை, கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் நெடுஞ்செழியன், செயலாளர் ஜெயப்பிரகாசம், இயக்குனர் என்.எஸ்.குடியரசு, முதல்வர் சிவானந்தம், உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார் ஆகியோர் பாராட்டு வாழ்த்து தெரிவித்தனர்.