டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 17- அனைத்து விவசாயக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். குறுவை சாகுபடிக்கு கடன் கேட்டு காத்திருக்கும், அனைத்து விவசாயிக ளுக்கும் நிபந்தனையின்றி பயிர்க் கடன் வழங்க வேண்டும். நகைக் கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் ஏற்கனவே இருந்த நடைமு றையிலேயே, தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கூட்டுறவு வங்கிகள் முன்பாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நட ராஜன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை யில், மகாராஜா சமுத்திரம் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு வங்கி முன்பு வி.ச பொறுப்பா ளரும், சிபிஎம் ஒன்றியச் செயலாளருமான எஸ். கந்தசாமி தலைமை வகித்தார். கரம்பயத்தில் விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பி னர் எம்.செல்வம் தலைமை வகித்தார். தாம ரங்கோட்டையில் சங்க மாவட்டக் குழு உறுப்பி னர் ஏ.கோவிந்தசாமி தலைமை வகித்தார். திரு வோணம் ஒன்றியம் அனந்த கோபாலபுரத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் கே.ராமசாமி, ஊரணிபுரத்தில் சங்க ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்த னர்.
மதுக்கூர்
மதுக்கூர் கீழக்குறிச்சியில் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.அய்யநாதன் தலைமை வகித்தார். ஒரத்தநாடு மத்திய கூட்டு றவு வங்கி முன்பு விவசாயிகள் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பூதலூர் வடக்கு ஒன்றியம் முல்லைக் கொடியில் முருகேசன், தோகூரில் சம்சுதீன் தலைமை வகித்தனர். பூதலூர் தெற்கு ஒன்றி யம் சார்பில், பூதலூர் 4 ரோட்டில் சங்க ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார்.
சேதுபாவாசத்திரம்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டைவய லில் விவசாய சங்கத் துணைத் தலைவர் நீல கண்டன் தலைமை வகித்தார். குருவிக்கரம்பை யில் ஆர்.எஸ். வேலுச்சாமி தலைமை வகித்தார். திருவையாறில் சங்க மாவட்டப் பொருளாளர் எம். பழனி அய்யா தலைமை வகித்தார்.
கும்பகோணம்
பாபநாசத்தில் சங்க மாவட்ட துணைச் செயலாளர் காதர்உசேன், ஒன்றிய செயலா ளர் முரளிதரன், ஒன்றிய பொருளாளர் தங்கராசு, திருவிடைமருதூரில் விவசாய சங்க பொறு ப்பாளர்கள் விஸ்வநாதன், வரதராஜன், திரு விடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜீவபாரதி, மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரி சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவாரூர்
தென்னவராயநல்லூரில் மாங்குடி வேளா ண்மை கூட்டுறவு வங்கி முன்பாக விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ஜி.பழனிவேல், தப்ப ளாம்புலியூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஒன்றிய செயலாளர் ஜி.பவுன்ராஜ், கொட்டாரக்குடி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஒன்றியத் தலைவர் வி.ஜெயபால் ஆகியோர் தலைமை வகித்தனர்.
குடவாசல்
குடவாசல் ஒன்றியத்தில் ஓகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் பெரும்பண்ணையூர், சீதக்கமங்கலம் ஆகிய மையங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓகை யில் குடவாசல் ஒன்றிய செயலாளர் டி.ஜி.சேகர் தலைமை ஏற்று கண்டன உரையாற்றினார். பெரு ம்பண்ணையூரில் சங்க ஒன்றிய தலைவர் என். துரை மணி, துணைத்தலைவர் வி.கிருஷ்ண மூர்த்தி, சீதக்கமங்கலத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி.கண்ணன், எம்.அந்தோ ணிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். நீடா மங்கலம் ஒன்றியத்தில் சங்க மாவட்டச் செயலா ளர் வி.எஸ்.கலியபெருமாள் தலைமையிலும், தேவங்குடி, பூவனூரில் நகர பொறுப்பாளர் ஜி.டி. ஜோசப், ஒட்டகுடியில் ஒன்றிய குழு உறுப்பினர் மருத.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலும் நடைபெற்றது.
நன்னிலம்
நன்னிலம் ஒன்றியம் பேரளத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியப் பொருளாளர் எஸ். தங்கராசு தலைமையிலும், வேலங்குடியில் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.முனுசாமி தலைமையிலும், பாவட்டக்குடியில் கே.துரை ராஜ் தலைமையிலும், கொல்லாபுரத்தில் ஏ.சின்னப்பா, எஸ்.துரைசாமி, சங்க ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தலைமையிலும் நடை பெற்றது.
கொரடாச்சேரி
கொரடாச்சேரி கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் வங்கி முன்பு சங்க மாவட்டத் துணைத் தலைவர் எம்.சேகர் தலைமையிலும், என்கண் கூட்டுறவு வங்கி முன்பு ஒன்றிய செயலா ளர் டி.ஜெயபால், துணைத்தலைவர் சி.லோக நாதன் தலைமையிலும், மணக்காலில் ஒன்றிய பொருளாளர் கே.செந்தில், குளிக்கரையில் வி.ச. ஒன்றியக் குழு என்.மலர்குமார், எருக்காட்டூ ரில் ஆர்.இலக்குமணன், ஆர்.மருதையன் தலை மையிலும் நடைபெற்றது.
மன்னார்குடி
மன்னார்குடியில் உள்ள தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் எதிர்புறம் நகர செயலா ளர் ஜி.மாரிமுத்து தலைமை வகித்தார். தமி ழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். முத்துப்பேட்டையில் எஸ்.முகமது அலி ஜின்னா தலைமை வகித்தார். முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. முத்துப்பேட்டை நகரத்தில் செல்ல த்துரை தலைமையிலும், நாச்சிகுளத்தில் எஸ். முகமது அலி ஜின்னா தலைமையிலும் நடை பெற்றது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு பி.நடராஜன் தலைமை வகித்தார். பிச்சன் கோட்டகம் தென்பாதியில் தெற்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ். மணியன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் என் வீராச்சாமி தலைமையில் கொக்காலடியிலும், ஆதிரங்கம், தலைக்காடு, ராயநல்லூர், மேட்டு ப்பாளையம், நுணாக்காடு ஆகிய இடங்களில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது. கச்சனத்தில் சங்க ஒன்றிய பொ ருளாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மணலியில் ஒன்றிய தலைவர் சுப்பிரமணி யன் தலைமை வகித்தார். திருத்தங்கூரில் ஒன்றிய செயலாளர் எம்.முருகதாஸ் தலைமை வகித்தார்.
தரங்கம்பாடி
தரங்கம்பாடி வட்டத்தில் 5 இடங்களில் கூட்டுறவு வங்கிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. செம்பனார்கோவிலில் ஜி.கருணா நிதி தலைமையிலும், ஆக்கூரில் என்.பன்னீ ர்செல்வம் தலைமையிலும், திருக்கடையூரில் சண்முகம் தலைமையிலும், நல்லாடையில் சங்க வட்டத்தலைவர் சந்திரமோகன் தலைமை யிலும், திருக்களாச்சேரியில் எஸ்.ராஜேந்திரன் தலைமையிலும் நடைபெற்றது.