tamilnadu

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் வழியாக பேருந்துகள் இயக்க கோரிக்கை

திருவாரூர், மே 7-திருவாரூர் மாவட்டம் விளமல் கல்பாலம் அருகில் ரூ.11 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது. இதனால் பழைய நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி பழைய நிலையம் வெறிச்சோடியது. இதனால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள், பொதுமக்கள் பழைய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன் உள்ளிட்டோர் மீது திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து உதவி ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.இதில் நாகை, திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை செல்லும் பேருந்துகள் அனைத்தையும் திருவாரூர் பழைய பஸ் நிலையம் வழியாக இயக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதியளித்தனர். 

;