tamilnadu

img

மண்ணச்சநல்லூர் பகுதியில் பாரிவேந்தர் வாக்குச் சேகரிப்பு

மண்ணச்சநல்லூர், ஏப்.9-மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் செவ்வாய் கிழமை திருச்சிமண்ணச்சநல்லூர் சட்டமன்றதொகுதி மண்ணச்சநல்லூர்கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சாண்டார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பிரச் சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். இதில் பாரிவேந்தர் பேசியதாவது: நாட்டை ஆட்சிசெய்பவர்கள் நல்லவர் களாக இருக்க வேண்டும் ஆட்சியாளர்கள் நல்லவர் களாக இருந்தால் தான் மக்கள் நன்றாக இருக்க முடியும்.மாற்றத்திற்கான தேர்தலில் மக்கள் நீங்கள் தான் அடிகோல் நாட்ட வேண்டும். அதன்தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். உத்தமர்கோவில் பகுதியில் பாலம், ஸ்ரீரங்கம் பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுப்பேன். சமயபுரம் கோவிலுக்கு நடைபாதையை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்துநிறைவேற்றி தருவேன் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டசெயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ், ஒன்றிய செயலாளர் கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சம்பத், பூமாலை, பாலகிருஷ்ணன், சக்திவேல்,பன்னீர்செல்வம், திமுக ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாபதி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் கலை, விடுதலை சிறுத் தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நீலவாணன், மதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் டிடிசி சேரன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சி வெண்மணி கலைக்குழு பிரச்சாரம் நடைபெற்றது.

;