tamilnadu

img

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆட்டோ - ரிக்சா ஓட்டுநர் சங்கம் ஆதரவு

திருச்சிராப்பள்ளி, ஏப்.10-ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் சங்கத்தின் (சிஐடியு) கல்பனா ஆட்டோ நிலைய ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் செவ்வாயன்று நிலையஅலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஆட்டோ நிலைய தலைவர் ராஜூ தலைமை வகித்தார். மாவட்டதுணைத் தலைவர் அப்பாஸ், பொருளாளர் அசோக், துணை செயலாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ரெங்கராஜன், மாவட்ட துணைத் தலைவர் அழகப்பன், மாவட்டத் தலைவர் பக்ருதீன்பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பது மற்றும் வாக்களிப்பது என முடிவெடுக்கப்பட்டது. முன்னதாக தேர்தல் நிதியாக ரூ.10 ஆயிரத்தை சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ரெங்கராஜிடம் ஆட்டோ-ரிக்சா நிலைய நிர்வாகிகள் வழங்கினர். நிலைய செயலாளர் அப் துல்ஷெரிப் நன்றி கூறினார்.

;