tamilnadu

img

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 18- திருச்சி மாவட்டத்தில் 15 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டு னர்கள் உள்ளனர். இவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே நலவாரி யத்தில் பதிவு செய்துள்ளனர். 90 சதவீதம் பேர் பதிவு செய்யாத நிலை  உள்ளது. எனவே கடந்த 50 நாட்க ளாக வாழ்வாதாரமின்றி கஷ்டப் படும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொரோனா பேரிடம் நிவாரண நிதி யாக ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும். மாவட்ட நலவாரிய அலுவலகத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்து தகுதியுள்ளவர்களுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும். மாவட்ட எல்லைக்குள் பயணிகள் ஆட்டோவை தனிநபர் இடைவெளி யுடன் இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்கம் சார்பில் திங்களன்று ஆட்சி யர் அலுவலகம் அருகில் மனு கொ டுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கி னார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலா ளர் ரெங்கராஜன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயபால், மாவட்ட தலை வர் ராமர், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன், மாநிலக்குழு உறுப்பினர் பக்ருதீன் பாபு, மாவட்ட பொருளாளர் அன்பு செல்வம், மாவட்ட அமைப்பு செயலா ளர் சரவணன், ஜங்சன் பகுதி செய லாளர் ரபீக் ஆகியோர் பேசினர். பின்னர் ஆட்சியரிடம் மனு கொடுக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வ லமாக வந்த ஆட்டோ ஓட்டுனர்க ளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்றனர். இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் நடந்த பேச்சுவார்த்தை யில் நிர்வாகிகள் மட்டும் ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பது என முடி வானது. இதனையடுத்து சிஐடியு நிர்வாகிகள், ஆட்சியரிடம் கோரி க்கை மனுக்களை கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். இதனையடுத்து ஆட்டோ ஒட்டுனர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.