tamilnadu

img

ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், மே 22- ஊரடங்கு காரணமாக வாழ்வாதா ரம் இழந்த ஆட்டோ தொழிலாளர்க ளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து நாகப்பட்டினம் ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டது. நாகைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சு.மணி தலைமை வகித்தார். கட்டுமானத் தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் பி.செல்வராஜ் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். ஆட்டோ ஓட்டுநர் சங்கம்(சி.ஐ.டி.யு.) மாவட்டச் செயலாளர் எம்.வி.மகேந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்

அறந்தாங்கி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சிஐடியு, ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பா ட்டம் செய்தனர். பேருந்து நிலை யம் அருகே, அரசு மருத்துவமனை ஆட்டோ நிலையம், கோபால சமுத்திரம் ஆட்டோ நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிஐடியு எஸ்.கவிவர்மன், ஏ.பாலசுப்பிரமணியன், கணேசன், அடைக்கலம், பேரின்ப நாதன், ஏஐடியுசி, மாவட்ட துணைச் செயலாளர் பெரியசாமி, ஏஐடியுசி, மாவட்ட குழு உறுப்பினர் ஏ.ராஜேந்தி ரன், சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன், ஏஜஒய்எப் மாவட்ட தலைவர் கே.ராஜேந்திரன் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை அருகே சிஐடியு தொ.மு.ச. ஏஐடியுசி உள்பட பல சங்க தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.