tamilnadu

img

சுடுகாட்டில் குப்பைக் கிடங்கு அமைக்க தஞ்சை மக்கள் எதிர்ப்பு

தஞ்சாவூர், ஜூன் 19- தஞ்சாவூர் சுந்தரம் நகர் விரிவாக்க பகுதியில் சாந்தி வனம் என்ற சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் தற்போது மாநகராட்சி சார்பில் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை களை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரிப்ப தற்கான மையம் அமைக்க கட்டுமானப் பணிகள் தொடங்கி யுள்ளது. இதையடுத்து அப்பகுதியின் நகர்நலச்சங்களின் நிர்வாகிகள், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.இறைவன் தலைமையில் செவ்வாய்க்கிழமை சுடுகாட்டில் ஒன்று கூடி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுடுகாட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க கூடாது, சுடுகாட்டில் அதற்கான பணிகளை மட்டுமே செய்ய வேண்டும், வேறு எந்த பணியும் அங்கு கொண்டு வரக் கூடாது என முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து சி.இறை வன் கூறுகையில், இந்த பகுதியில் யாராவது இறந்தால் அவர்களது உடலை 15 கி.மீட்டர் தூரமுள்ள ராஜகோரிக்கு கொண்டு செல்ல சிரமமாக இருப்பதாக கூறி கடந்த 1971 ம் ஆண்டு நீலகிரி, மேலவெளி ஊராட்சி பகுதிகளுக்காக பொதுமக்களிடம் நிதி திரட்டி ஒரு ஏக்கர் நிலம் இந்த பகுதி யில் வாங்கப்பட்டது. பின்னர் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, இந்த பகுதிகளில் உள்ள விரி வாக்கப் பகுதிகள் அனைத்தும் நகராட்சியோடு இணைக்கப் பட்டது.  இந்த பகுதியில் 36 முதல் 41 வார்டுகளில் அடங்கிய 80 குடி யிருப்பு நலச்சங்கங்கள் ஒன்றிணைந்து சாந்திவனம் என்ற இந்த சுடுகாட்டை உருவாக்கியுள்ளோம். இதில் இந்து, கிறிஸ்த வர்கள், இஸ்லாமியர்களுக்கு தனித்தனியாக உடல் தகனம், அடக்கம் செய்யும் இடங்கள் உள்ளது. சுடுகாட்டுக்காக உரு வாக்கப்பட்ட இந்த இடத்தில் தற்போது மாநகராட்சி நிர்வா கம் குப்பைகளை தரம் பிரிக்க கட்டுமானப்பணிகளை மேற்கொள்கிறது. சுடுகாட்டில் அதற்கான பணிகளை மட்டுமே செய்யவேண்டும், குப்பைகளை வேறு எந்த பகுதியில் வேண்டுமானாலும் தரம் பிரித்துக் கொள்ளலாம், ஆனால் சுடுகாடை வேறு எங்கும் அமைக்க முடியாது. இதனை மாநக ராட்சி நிர்வாகம் கருத்தில் கொண்டு சுடுகாட்டில் மேற் கொள்ளும் கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.