tamilnadu

கூலி உயர்வு கேட்டு 8 நாள் தொடர் வேலைநிறுத்தம் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு

திருச்சிராப்பள்ளி, ஜூலை 5-  திருச்சி மாவட்டம் லால்குடி நகர் ஊராட்சியில் குறுவை  சாகுபடி வேலைக்கு நாற்று நடவுக்கும், களை எடுப்பு  உள்ளிட்ட தினசரி கூலி வேலைக்கும், ஆண் தொழிலாளர்க ளுக்கான மண்வெட்டி வேலைக்கும் கூலி உயர்வு கோரி கடந்த  ஜுன் 27 முதல் 8 வது நாளாக தொடர் வேலை நிறுத்தம் நடை பெற்று வருகிறது. நகர் ஊராட்சியில் இருமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.  இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சி யர் சண்முக சுந்தரவள்ளி தலைமையில் சனிக்கிழமை முத்த ரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சாதா நடவு பணிக்கு  தற்போதைய கூலியிருந்து ஒரு ஏக்கருக்கு ரூ.300-ம், பெண்க ளுக்கான தினக்கூலி ரூ.10-ம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.  பேச்சுவார்த்தையில் துணை வட்டாட்சியர் முருகன் உள்ளி ட்ட வருவாய்துறை அலுவலர்கள், அகில இந்திய விவசாய தொ ழிலாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் அ.பழநிசாமி, மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் சி.ஜெகதீசன், வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் எல். நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.