திருச்சிராப்பள்ளி, செப்.3- திருச்சி மாநகராட்சி 38வது வார்டு பகுதியில் உள்ள செட்டியப்பட்டி, சோம நாயக்கன்பட்டி, கலிங்குநகர் பகுதி விவ சாயிகள் செட்டியப்பட்டியில் குளத்தின் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் செட்டியப்பட்டி குளத்தை தூர்வாரி மேட்டுகட்டளை வாய்க்கால் மூலம் தண்ணீர் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங் களை நடத்தியும், பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நட வடிக்கை எடுக்காததை கண்டித்தும், கட்சியின் அபிஷேகபுரம் பகுதிக்குழு சார்பில் செவ்வாய் அன்று கே.கே.நகர் எல்ஐசி காலனியில் உள்ள வி.ஏ.ஓ அலு வலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அபிஷேகபுரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலை மை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், பழனியாண்டி, மூக் கன் ஆகியோர் பேசினர். தகவலறிந்து அங்கு வந்த கே.கே.நகர் காவல்துறை யினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பின்னர் விஏஓ சுந்தர்ராஜ் தலைமை யில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அபிஷேகபுரம் பகுதி செயலா ளர் வேலுச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், துணை தாசில்தார் ஞானமூர்த்தி, விவசாயிகள் முருகேஷ், தனம், கோவிந்தராஜ், சரஸ்வதி, ரவி, ஜோஸப் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் செட்டியப் பட்டி குளத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து கிழக்கு வட்டாட்சியர் தலை மையில் வரும் 11-ம் தேதி பேச்சு வார்த்தை நடத்துவது என முடிவா னது. இதையடுத்து போராட்டம் கைவி டப்பட்டது.