tamilnadu

img

ஊராட்சி துணைத் தலைவராக சிபிஎம் கவுன்சிலர்கள் தேர்வு

திருச்சிராப்பள்ளி, ஜன.12- திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் சூளியாபட்டி ஊராட்சி துணைத்தலைவர் பத விக்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மூத்த தோழர் துளசிவேல் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வெற்றி  பெற்ற துளசிவேலுவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் பாலு, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் கண்ணன், சேது ராமன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் மணப்பா றை ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சி துணை த்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூங்கோதை துணைத் தலைவராக தேர்வுசெய்யப்பட்டார்.

;