கும்பகோணம், மே 22- தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை அன்று ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று, பின்னர் ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கச் சென்றனர். அப்போது சிஐடியு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட ஆட்டோ தொழிலாளர்களை காவல்துறை அடாவடியாக கைது செய்தது. இதனை கண்டித்து கும்பகோணம் ஒன்றியம் கடிசம்பட்டியில் சிஐடியு மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாட்டு வண்டி தொழிலாளர் சங்க தலை வர் கோவிந்தராஜன், செயலாளர் லட்சும ணன் தலைமையில் சதீஷ், செந்தில், விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் நாகராஜன், மாதர் சங்க தலைவர் கமலா விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கலையரசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.