tamilnadu

img

ஆசிரியருக்கு பாராட்டு

தஞ்சாவூர், மே 6-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம்பெரியதெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் செ.இராமநாதன். இவரது கல்விச் சேவையைப் பாராட்டி, மேட்டுப்பாளையத்தில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில், ‘‘கலாம் கண்ட கனவு நாயகன்’’ என்ற விருதை டாக்டர் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் ஜெயராமன் வழங்கினார்.நிகழ்ச்சியில் நீதிபதி சரவணபாபு மற்றும் ஆறுமுகசாமி, ஓடந்துறை சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஆசிரியர் செ.ராமநாதனை, வர்த்தக கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், செயலாளர் ஏ.டி.எஸ்.குமரேசன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, லயன்ஸ் ஜி.ராஜா, பழ.பழனியப்பன், விஜய், மூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.