tamilnadu

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, மே 8-புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளதாவது:அரசு தொழிற் பயிற்சி நிலையங்களிலும், தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும், தொழிற் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்திட, மாவட்ட கலந்தாய்வு மூலம் ஆகஸ்ட்-2019 மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

எந்த மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். அவரது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கைக்கு மட்டுமே பரிசீலிக்கப்படும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்ட தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால்ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் விராலிமலையில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் உள்ளன.மேலும், தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டில் சேரவும் ஒரே விண் ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. 10-வது மற்றும் 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் ஒரே விண்ணப்பத்தின் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 31.5.2019. இதற்கு கைபேசி வாயிலாக கலந்தாய்வு தேதி குறுந்தகவலாக தெரிவிக்கப்படும். கலந்தாய்வு அன்று அசல் மற்றும் நகலுடன் அனைத்து சான்றிதழ்களுடன் கலந்தாய்வுமையத்திற்கு நேரில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், விபரங்களுக்கு புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை நேரிலோ, 04322-221584 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


;