tamilnadu

img

வர்க்க ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு

தஞ்சாவூர்: திருமெய்ஞானம் தியாகிகள் அஞ்சான், நாகூரான் நினைவு தினத்தை யொட்டி சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வர்க்க ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், வி.தொ.ச மாவட்ட துணைச் செயலாளர் கே.அபிமன்னன், சிபிஎம் மாநகரச் செயலாளர் என்.குருசாமி, ஒன்றியச் செயலாளர்கள் தஞ்சை எம்.மாலதி, திருவையாறு ஏ.ராஜா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அருளரசன், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மணிமாறன், நசீர், ராஜா முகமது கலந்து கொண்டனர்.

;