சிபிஎம் கடும் கண்டனம்
கரூர், மே 29- வெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் கண்ணன் மீதான சாதிய மனோ பாவ தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள் ளது. இது தொடர்பாக கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி தனது அறிக்கையில் கூறியதாவது, கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் பூலாம்பாளையம் கிராமம், செல்லரபாளையத்தைச் சேர்ந்த வெளிச்சம் தொலைக்காட்சி யின் நிருபராக உள்ள அருந்ததியர் வகுப்பைச் சார்ந்த கண்ணன் 24.05.2020 அன்று, அவருடைய ஊரில் கொரோனா தொற்று பரவல் நிலையில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காத திருமணம் குறித்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொலைபேசி மூலம் புகார் தெரிவித் துள்ளார். இத்திருமணத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருவதாக இருந்துள்ளது.
இந்நிலையில், செல்லரபாளை யத்திற்கு வந்த அமைச்சர், சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி, அவருடன் வந்தவர்களை தூண்டிவிட்டு தாக்கச் செய்ததாக நிருபர் கண்ணன் காணொளிப் பதிவை வெளி யிட்டுள்ளார். மேலும் கண்ணனின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டதாகவும், அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அமைச்சரே முழுப் பொறுப்பு என்றும் பதிவிட்டுள்ளார். இதையொட்டி அதிகாரத்தின் மூலம் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து, பிணையில் விடுவித்துள்ளனர். தன் மீதான தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை கோரி நிருபர் கண்ணன் புகார் மனுவை, காவல் நிலையம் மட்டுமின்றி, காவல்துறை தலைவர், மாநில மனித உரிமைகள் ஆணையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நிருபர் கண்ணனுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கண்ணன் மீதான தாக்குதலை அதிகார துஷ்பிரயோகமாக பார்க்க வேண்டி யுள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதோடு வன்மையான கண்டனத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழு தெரிவித்துக் கொள்கி றது என அவர் தெரிவித்துள்ளார்.