tamilnadu

முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை தராத தனியார் சிறுசேமிப்பு நிறுவனம்

புதுக்கோட்டை, ஜூலை 4- தனியார் சிறுசேமிப்பு நிறுவனத்தில் செலுத்தப்பட்ட ரூ.5 கோடி பணம் முதிர்வு காலம் முடிந்தும் திருப்பித் தராமல் மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டி அந்த நிறுவனத்தின் முக வர்கள் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யிடம் புதன்கிழமை புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜிடம் ராயல் அக்ரோ என்ற தனியார் நிறுவனத்தில் முகவர்களாக பணியாற்றி வந்த 40-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.  அவர்கள் கூறுகையில், வேலூரை தலைமையிடமாக கொண்டது ராயல் அக்ரோ என்று தனியார் சிறு சேமிப்பு நிறு வனம், பொதுமக்களிடம் பணத்தை வசூலித்து அந்த நிறு வனத்திற்கு செலுத்தும் முகவர்களாக செயல்பட்டோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களிடம் வசூல் செய்து கொடுத்த சுமார் ரூ.5 கோடியை முதிர்வு காலம் முடிந்தும் கடந்த 3 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட நிறுவனம் திரும்பத் தராமல் மோசடி செய்து விட்டது. இதனால் பணத்தை தங்களி டம் கொடுத்த பொதுமக்கள் பணத்தைக் கேட்டு தகாத வார்த்தையில் பேசி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப் பட்ட நிறுவனத்திடம் கேட்டால் முறையான பதில் இல்லை என்றும் தெரிவித்தனர். மேலும் அந்த நிறுவனத்தின் அலுவலகம் தற்போது மூடப் பட்டுள்ளதாகவும் உடனடியாக மாவட்ட கண்காணிப்பாளர் நட வடிக்கை எடுத்து தங்களிடம் மோசடி செய்த பணத்தை பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.