tamilnadu

திருச்சி அருகே 8 பேர் பலியான சம்பவம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம், படுகாயமடைந்தவருக்கு  ரூ.1 லட்சம் வழங்குக! மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

 திருச்சிராப்பள்ளி, ஆக.19-  திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ளது பேரூர். இந்த ஊரை சேர்ந்த 16 பேர் துறையூர் அருகே உள்ள எஸ்.என்.புதூ ரில் நடைபெற்ற கோவில் விழாவில் கலந்து கொள்ள ஞாயிறு அன்று லோடு வேனில் சென்றனர். அப்போது லோடு வேன் எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கிணற்றில் விழுந்தது. இதில் முசிறி பேரூரை சேர்ந்த குணசீலன்(65), அவரது மனைவி எழிலரசி(60) குணசீலன் தம்பி ஞானசீலன் மனைவி குமாரத்தி (52) தனபால் மனைவி கோமதி(40) முருகேசன் மனைவி கயல்விழி(35) கயல்விழி மகள் சஞ்சனா(4) இளங்கோவன் மகள் யமுனா(10) மகன் சரண்குமார்(4) ஆகிய 8 பேர் இறந்தனர். இதில் கோமதி மட்டும் எஸ்.என்.புதூர் அருகேயுள்ள கட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர். மற்றவர்கள் அனை வரும் பேரூர் கிராமத்தை சேர்ந்தவர்கள். பேரூரில் பலியான வர்களின் குடும்பத்தினரின் வீட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், எஸ்.சந்திரன், ஏ.பழநிசாமி, ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், சுப்ரமணி யன் ஆகியோர் திங்களன்று சென்று இறந்தவர்களின் உட லுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் இச்சம்பவம் குறித்து கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் கூறுகையில்: சாதாரண கூலி தொழி லாளர்களான இவர்கள் எதிர்கால சொத்தாக இருந்த தங்கள் குழந்தைகளை இழந்து படுகாயம் அடைந்து பெற்றோர் களும் மருத்துவமனையில் உள்ளனர். மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாய மடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்ற னர். நிர்க்கதியாய் நிற்கும் அந்த குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆறுதலை தெரிவித்து கொள்கி றது.  அரசு அறிவித்துள்ள இழப்பீடு ரூ.2 லட்சம் என்பது போதாது. அந்த குடும்பங்களின் ஏழ்மை நிலையையும், எதிர்காலத்தையும், மருத்துவ செலவினங்களையும் அரசு கவனத்தில் கொண்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் அறி வித்து வழங்க வேண்டும் என என்றார்.