tamilnadu

img

மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

திருச்சி மணப்பாறை அருகே குளத்தில் விழுந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
திருச்சியில் மணப்பாறை அருகே உள்ள பூசாரிப்பட்டியில் உள்ள பாப்பான்குளத்தில் குளித்த போது சிறுவர்கள் மூவர் நீரில் மூழ்கினர். இந்த விபத்தில் காட்டுப்பட்டி அண்ணாவி நகரைச்  சேர்ந்த சகோதரர்கள் மணி, முரளி, நண்பர் அஸ்வின் ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.