வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் இந்த மாதம் 27-ஆம் தேதியன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வுள்ளது. ஆனால், வேட்பு மனுத் தாக்கல் செய்வது 8-ஆம் தேதியுடன் முடிவுற்றவுட னேயே பிஜேபி 85 சதவீத வார்டுகளிலும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக் கப்பட்டது! மாநிலத் தேர்தல் கமிஷனர் பிர ஸேன்ஜித் பட்டாச்சார்யாவே செய்தியா ளர்கள் கூட்டத்தை நடத்தி பிஜேபி வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டார். பிஜேபியின் இந்த ஒருதலைப்பட்சமான வெற்றியானது திரிபுராவில் பிஜேபிக்கு மக்கள் ஆதரவு பெருகிவிட்டதாகப் பிரதிபலிக்கவில்லை. பணத்தாலும் பலப்பிரயோகத்தாலும் அதிகார துஷ்பிரயோகத்தாலும் மட்டுமல்ல, தேர்தல் கமிஷனின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை மூலமாகவும் பிஜேபி பெற்ற வெற்றி இது.
பல்வேறு அரசியல் கட்சிகளது வேட்பா ளர்களின் எண்ணிக்கைக் கணக்கைப் பரி சீலித்துப் பார்த்தாலே இந்த விஷயம் தெளி வாகும். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களை வேட்பு மனுத் தாக்கல் செய்யவிடாமல் அவர்களுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல் நடத்தியும் மிரட்டியும் பெற்றதே பிஜேபியின் இந்த வெற்றி. மாநிலத்தின் 591 கிராமப் பஞ்சாயத்து களில் உள்ள 6127 வார்டுகளில் பிஜேபி வேட் பாளர்களை நிறுத்திய போது இடதுசாரிக் கட்சிகள் 412 வார்டுகளிலும், காங்கிரஸ் 727 வார்டுகளிலும் மட்டுமே தங்கள் வேட்பாளர்க ளை நிறுத்த முடிந்தது. 35 பஞ்சாயத்து சமிதி களில் (ப்ளாக் பஞ்சாயத்து) உள்ள அனைத்து 419 வார்டுகளிலும் பிஜேபி வேட்பாளர்க ளை நிறுத்தியபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 93 வார்டுகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 வார்டுகளிலும், காங்கிரஸ் 74 வார்டு களிலும் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்த முடிந்தது. எட்டு மாவட்டப் பஞ்சாயத்துகளில் உள்ள எல்லா 116 வார்டுகளிலும் பிஜேபி வேட்பாளர்களை நிறுத்தியபோது இடதுசாரி முன்னணி 93 வார்டுகளிலும் காங்கிரஸ் 81 வார்டுகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்த முடிந்தது. போட்டியிட இடதுசாரி க்குப் போதிய வேட்பாளர்கள் இல்லை என்ப தால் அல்ல. மாறாக, அவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான அமைதியான சூழல் இல்லாததே இந்த நிலைமைக்குக் காரணம். வேட்புமனுத் தாக்கலுக்குத் தேவை யான முன்ஏற்பாடுகள் செய்வதற்கான அவ காசத்தைத் தேர்தல் கமிஷனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுமுன்னணியும் மீண்டும் மீண்டும் கோரியபோதும் அதற்குப் பலனில்லை.
வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்ற போதெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கும் கட்சி ஊழியர்களு க்கும் எதிராகக் கடுமையான வன்முறையை பிஜேபி கட்டவிழ்த்துவிட்டது. எடுத்துக் காட்டாக, வடக்குத் திரிபுரா மாவட்டத்தில் உள்ள தர்மநகர் பஞ்சாயத்தைச் சேர்ந்த மேற்கு சந்திராப்பூரில் மார்க்சிஸ்ட் வேட்பா ளரை பைக்கில் வந்த பிஜேபி குண்டர்கள் தாக்கினர். இதைக் கண்ட பெண்கள் உள்பட பலர் குண்டர்களை விரட்ட ஓடிவந்தபோது அவர்கள் பைக்கில் ஏறித் தப்பித்துவிட்டனர். பிறகு இந்தக் குண்டர்கள் தர்மநகரில் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தைத் தாக்கிச் சேதப்படுத்தினர். தடுக்கவந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் அமிதவ தத்தா உள்ளிட்டோர் குண்டர்களின் தாக்கு தலில் காயமுற்றனர். தெற்குத் திரிபுராவில் உள்ள ஸத்சந்த் ஆர்டி பிளாக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை வேட்புமனுத் தாக்கல் செய்யவிடாமல் பிஜேபி குண்டர்கள் தடுத்துவிட்டனர். ஸிபாஹிஜால மாவட்டத்தைச் சேர்ந்த போக்ஸநகர் பிளாக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை வேட்புமனுத் தாக்கல் செய்வதற்குச் செல்லவிடாமல் பிஜேபி குண்டர்கள் அவர்களைச் சிறைப்பிடித்துவைத்தனர். உனக்கோட்டி மாவட்டத்தில் உள்ள கைலாஸ் சஹரியைச் சேர்ந்த கௌர்நகர் கிராமப் பஞ்சாயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அன்வர் அலி பிஜேபி குண்டர்களை மீறி வேட்புமனுத் தாக்கல் செய்ததால் அவரது ரிக்ஷாவை குண்டர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் போட்டிக் களத்திலேயே இருக்கக்கூடாது என்கிற பிஜேபியின் ஜனநாயக விரோத அக்கிரமத்தையே இவையெல்லாம் காட்டுகின்றன.
திரிபுரா சட்டமன்றத் தேர்தல் காலத்தில் பிஜேபிக்கு அனுகூலமாக இருந்த அரசியல் நிலைமையில் மாற்றம் ஏற்படுகிறது என்பதை மற்றவர்களைவிட அறிந்தவர்கள் சங்பரிவார்கள்தான். அதனால்தான், எதிர்க்கட்சி வேட்பாளர்களை வேட்புமனுத் தாக்கல் செய்யவிடாமல் பலத்தை பிரயோ கித்துத் தடுத்தனர். மக்களின் ஆதரவை இழக்கிறோம் என்கிற உண்மையை மறைப்ப தற்கு இது உதவுமென அவர்கள் கருது கிறார்கள். இதற்குமுன் மூன்று அடுக்குப் பஞ்சாயத்துகளுக்கு நடைபெற்ற உபதேர்த லிலும் இதே மாதிரியான தத்திரத்தைக் கையாண்ட பிஜேபி 96 சதவீத வார்டுகளிலும் வெற்றியை வாரிக் கொண்டது. அதே தந்திரத்தோடு ஒற்றையாகக் களத்தில் நின்று வெற்றிபெறவே பிஜேபி இப்போது முயற்சிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில்-குறிப்பாக, மேற்குத் திரிபுரா தொகுதியில் பெருமளவில் தேர்தல் முறைகேடுகள் அரங்கேறின. பாதிக்கும் அதிகமான வாக்குச் சாவடிகளில்- அதாவது 846 வாக்குச் சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டுமென்று இடதுசாரிகள் வலியுறுத்தியது இத்தகையச் சூழலில்தான். 168 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்துவதற்குத் தேர்தல் கமிஷனே உத்தரவிட்டது. இத்தனை வாக்குச் சாவடிகளிலும் மறுவாக்குப் பதிவு நடத்து வதற்கான தீர்மானம் பிஜேபியின் தலை மையில் பெருமளவிலான அத்துமீறல்களும் முறைகேடுகளும் நடைபெற்றன என்ப தற்கான சாட்சிப் பத்திரமாகும். இதே மாதிரியான நிலைமைதான் தற்போது மூன்றுஅடுக்குப் பஞ்சாயத்துத் தேர்தலிலும் தொடர்கிறது. இது ஜனநாய கத்தைச் சாகடிப்பதாகும். இதற்கு எதிராக பரந்த அளவில் வலுவான கண்டனம் எழ வேண்டும்.
நன்றி: தேசாபிமானி மலையாள நாளிதழ் (17.7.2019)
தமிழில்: தி.வரதராசன்