திண்டுக்கல், பிப்.7 அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம் சார்பாக சுயமரியாதை புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. வியாழனன்று முதுமலைக்கு சென்ற வனத்துறை அமைச்சர் சீனிவாசன் அங்குள்ள பழங்குடியின மாணவனை அழைத்து தனது செருப்பை கழற்றச் சொன்னார். இந்த சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டித்துள்ளன. இந்நிலையில் வாலிபர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழு சர்பில் அவருக்கு தந்தை பெரியாரின் சுயமரியாதை புத்தகங்களான ‘சமதர்மம்’, ‘இனிவரும் உலகம்’ ஆகிய புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு மாநில துணைச் செயலாளர் சி.பாலச்சந்திரபோஸ், மாவட்டச் செய லாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டத் தலைவர் விஷ்ணுவர்த்தன், மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர் தலை வர் கார்த்தி, தங்கவேல்,வடிவேல், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் முகேஷ் ஆகியோர் பங்கேற்ற னர்.