tamilnadu

திண்டுக்கல் மாவட்டத்தில்  இடி, மின்னலுடன் மழை

திண்டுக்கல், மே 25- திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இரவில் இடி மின்னலுடன் 30 நிமிடம் மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். பகல் நேரங்களில் வெயிலின் தாக்க த்தால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம்  குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல்லில் ஞாயிறன்று காலை முதல் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 8 மணிக்கு மேல் இடி மின்னலுடன் சுமார் 30 நிமிடம் மழை பெய்தது. இதேபோல் திண்டுக்கல் அடுத்துள்ள வேடசந்தூர் ,எரியோடு, தாடிக்கொம்பு, சின்னாளபட்டி, கொச வபட்டி, தவசிமடை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது .இரவு பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

;