tamilnadu

ஆற்றில் மூழ்கிய மாணவர் பலி

தருமபுரி, ஏப்.21-ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தாதபிள்ளையனூரைச் சேர்ந்தவர் செங்கோட்டையன் மகன் சிவபெருமாள் (30). இவர்,அதே பகுதியில் உள்ள தனியார்கல்லூரியில் படித்து வந்தார். தனதுநண்பர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த சிவபெருமாள் ஆலாம்பாடி பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் ஒகேனக்கல் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

;