tamilnadu

img

கூட்டமோ... கூட்டம் சோதனையிலிருந்து தப்பிச் செல்லும் பேருந்துகள்

திண்டுகல்லில் இருந்து மதுரைக்கு ஞாயிறு பகல் 12.15 மணிக்கு புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டது. திண்டுக்கல்-மதுரை மாவட்ட எல்லையான அம்மையநாயக்கனூர் சோதனைச்சாவடியில் காவல்துறை, சுகாதாரத் அதிகாரிகள் ஒவ்வொரு பேருந்தையும் சோதனை செய்தனர். இதிலிருந்து தப்பிக்க முடிவு செய்த தனியார் பேருந்தின் ஓட்டுநர் கொடைக்கானல் ரோடு- பள்ளபட்டி- வாடிபட்டி பிரிவு வழியாக ஒவ்வொரு கிராமத்தையும் பயணிகளுக்கு சுற்றிக் காண்பித்து பிற்பகல் 2.30 மணிக்கு மதுரையை வந்தடைந்தது.