tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி

திண்டுக்கல், ஜூலை 9- அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அலுவலகம் சார்பாக வியாழனன்று திண்டுக்கல்லில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.  திண்டுக்கல் சவேரியார்பாளையம், அச னாத்புரம், பள்ளபட்டி, முருகபவனம். கொட்டபட்டி, நந்தவனப்பட்டி, கள்ளிப்பட்டி, நந்தனார்புரம், செட்டிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது. திண்டுக்கல் ஏ.பி.நகர், பிஸ்மிநகர், சின்னபள்ளபட்டி, எம்.ஜி.ஆர்.நகர், ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வில் சங்கத்தின் மாவட்டத்தலைவர் செல்வநாயகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்கவுலர் ஜீவாநந்தினி, மாற்றுத்திறனாளிகள் சங்கம் நிர்வாகி டி.ஸ்டாலின், ஸ்டெல்லா, மாவட்ட மாற்றுத்திற னாளிகள் மறுவாழ்வு அலுவலர் என்.சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

;