tamilnadu

img

சேதமடைந்து பல ஆண்டுகளாகியும் சீரமைக்காத சாலை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து செந்துறை செல்லும் சாலை பாப்பாபட்டி விலக்கு வரை சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாகியும் சீரமைக்க படவில்லை. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சிலர் விபத்துக்குள்ளாகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.