பழனி:
தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் முன்னாள் மாநில தலைவர் பேராசிரியர் சொ.மோகனாவின் தாயார் அலமேலு (104) 19 ஆம் தேதி இரவு காலமானார். அவரது இறுதி நிகழ்வு 20 ஆம்தேதி மதியம் பழனி அண்ணா நகர் இல்லத்தில் நடைபெற்றது. இவரது மறைவிற்கு சிபிஎம் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், நகரசெயலாளர் கே.கந்தசாமி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி, மாதர் சங்க மாநில செயலாளர் பி.சுகந்தி, மாவட்டத் தலைவர் வனஜா, மாவட்டக் குழு
உறுப்பினர் பாண்டி, மற்றும் பி.கே.கருப்புசாமி மற்றும்அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.