சின்னாளபட்டி, ஆக.27- திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே காய்கறிகடையில் பணிபுரிந்த சிறுமியை ஏமாற்றி அவருக்கு தாலிகட்டி வல்லுறவுக்குள்ளாக்விட்டு தப்பியோடிய வரை காவல்துறையினர் கைதுசெய்தனர். கொடைரோட்டைச் சேர்ந்தவர் முரு கேசன் இவர் கொடைரோடு பேருந்து நிலை யம் அருகில் காய்கறி கடை நடத்தி வரு கிறார். இவருக்கு மூன்று பெண் குழந்தை கள் உள்ளன. முருகேசன் தனது மகள் கோகி லாவை காணவில்லை என அம்மைய நாயக்கனூர் காவல்நிலையத்தில் புகார ளித்துள்ளார். இந்த நிலையில் சிறுமி ஆக.25- கழுத்தில் தாலியுடன் வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோர் விசாரணையில் பசுபதி என்பவர் ஏமாற்றி தாலிகட்டியது தெரியவந்தது. பசுபதியை கைது செய்த காவல்துறையினர் திதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மற்றும் போக்சோ சட்டம், கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்திவு பசு பதியை திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையிலடைத்தனர்.