tamilnadu

img

அரசியல் சட்டம் காப்போம் சிறுபான்மை நலக்குழு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்:
காஷ்மீரில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு உரிமை வழங்க வேண்டும். தடுப்பு காவல் சட்டத்தில் சிறைகளில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும். சிஏஏ,என்.பி.ஆர். என்.ஆர்.சி. சட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு சார்பாக திண்டுக்கல் பேகம்பூர், ம.மு.கோவிலூர், அய்யலூர் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

மாநிலச் செயலாளர் வ.கல்யாணசுந்தரம், மாவட்டத்தலைவர் அரபுமுகமது, மாவட்ட துணைத்தலைவர்கள் ஸ்டாலின், எம்.கே.சம்சுதீன், மாவட்ட துணைச் செயலாளர் ஜமால்முகமது, அடியனூத்து ஊராட்சித்தலைவர் ஜீவானந்தம், நகரச் செயலாளர் அமானுல்லா, மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணன். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.முத்துச்சாமி, விவசாயத் தொழிலாளர் சங்கமாவட்டப் பொருளாளர் கண்ணன், சிபிஎம் திண்டுக்கல் நகரச் செயலாளர் பி.ஆசாத், திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் தா.அஜாய்கோஷ், வடமதுரை ஒன்றியச் செயலாளர் மலைச்சாமி உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.

;