tamilnadu

எலுமிச்சை விலை உயர்வு

திண்டுக்கல், மே 28-திண்டுக்கல் சிறுமலை பகுதியில் எலுமிச்சை அதிகம் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் எலுமிச்சை அதிக சார் உள்ளதாகவும் தரமானதாகவும் பலநாள் தாங்கும் சக்தி கொண்டதாகவும் இருப்பதால் சிறுமலை எலுமிச்சை பழத்துக்கு வியாபாரிகள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடும் வறட்சியின் காரணமாக இந்த ஆண்டு எலுமிச்சை விளைச்சல் குறைவானதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சிய டையச்செய்துள்ளது. ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.100 முதல் ரூ.140வரை விலை போனதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்