சின்னாளபட்டி, மார்ச் 27- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் சுமார் இரண்டாயிரத்து மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களும் நான்காயிரத்தித்றகும் மேற்பட்ட சாயத் தொழிலாளர்களும் உள்ளனர். கொரானோ அச்சம் காரணமாக இவர்கள் 10 நாட்களாக வேலைக்குச் செல்லவில்லை. இதனால் அவர்களது குடும்பங்கள் வறுமையில் தவித்து வருகின்றன
வறுமையில் வாடும் கைத்தறி நெசவாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.