tamilnadu

img

கொடைக்கானல் படகு சவாரி கட்டணம் உயர்வு : சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி  

திண்டுக்கல் : கொடைக்கானல் படகு இல்லத்தில் படகு சேவைக்கான கட்டணம் உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத் தலமான கொடைக்கானல் ஏரியில் படகு சவாரிக்கான கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. வார நாட்கள், வார இறுதி நாட்கள் என தனித்தனி கட்டணம் வசூலிப்பதாகச் சுற்றுலாப் பயணிகள் புகார் அளித்தனர். 

அதன்படி, ரூ.100 ஆக இருந்த கட்டணம், வார நாட்களில் ரூ.150 ஆகவும், வார இறுதியில் ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது . அதுமட்டுமின்றி வரிசையில் நிற்க விரும்பாமல் உடனே படகில் ஏற விரும்பினால் ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இந்த முறையில்லாத கட்டண உயர்வு பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

;