tamilnadu

img

பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு-போராட்டம்

திண்டுக்கல்:
திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து செய்தியாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்டக் கண்காணிப்பாளர் சக்திவேல் செல்ல அனுமதித்தார். அதன் பிறகு யாரும் செல்ல அனுமதிக்கவில்லை. ஊடக அறையில் தங்க வைக்கப்பட்டார்கள். 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதனை மறைப்பதற்காகவே இப்படி ஜனநாயக விரோதமாக செய்தியாளர்களை தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதற்கு செய்தியாள்ர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. 
 

;