tamilnadu

img

திண்டுக்கல்: சிபிஎம் தலைவர்கள் பொறுப்பேற்பு

திண்டுக்கல், ஜன.6- திண்டுக்கல் மாவட்டத் தில் உள் ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை வர்கள் திங்களன்று பொறுப் பேற்றனர் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் 2-ஆவது வார்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.செல்வநாயகம், 14- ஆவது வார்டில்தேர்ந்தெ டுக்கப்பட்ட ஜெ. ஜீவாநந்தினி  ஆகியோர் பொறுப்பேற்ற னர்.திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி களைச் சேர்ந்த 11 உறுப்பி னர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பதவியேற்பு நிகழ்வில் சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர் கே.பாலபாரதி, திமுக மக ளிரணி தலைவர் மெர்சி செந்தில்குமார்,திமுக ஒன்றியச் செயலாளர் நெடுஞ் செழியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி.கே.கருப்புசாமி, ஒன்றியச் செயலாளர் அஜாய்கோஷ், நகர் செய லாளர் ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.  ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினராக தேர்வு பெற்ற அமுதவள்ளி, ஒட்டன் சத்திரம் ஒன்ற்யத்தில் ஒன்றியக்குழு உறுப்பின ராக தேர்வு செய்யப்பட்ட பிரகாஷ் ஆகியோரும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

;