tamilnadu

ஆர்ப்பாட்டம்

 சின்னாளபட்டி, ஜூலை 20- கொரோனாவால் உயிரிழந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும். ரேஷன் கடை ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். முகக் கவசம் கையுறை கொடுக்க வேண்டும் தினமும் 200 ரூபாய் வழங்க வேண்டும் ஊக்கத்தொகை 2500 வழங்க வேண்டும் என வலியுறுத்தி நிலக் கோட்டையில் கூட்டுறவு சம்மேளன மாவட் டச் செயலாளர் மு.சாதிக்அலி, அய்யம் பாளையததில் முருகேசன், தும்மலப்பட்டி யில் அனுராதா, ஜம்புதுரைக்கோட்டையில் ராஜ முத்து, ராமராஜபுரத்தில் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டுறவுத்துறை ஊழியர்கள்
இராஜபாளையத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முனியாண்டி தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐ டியு மாவட்டத் துணைத்தலைவர் கணே சன், சிஐடியு நகர் கன்வீனர் சுப்பிரமணி யன், மாரியப்பன் எஸ். எஸ். கணேசன் உள் ளிட்ட கூட்டுறவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.