tamilnadu

தலித் ஊராட்சி தலைவரை செயல்பட விடாமல் தடுக்கும் சக்திகள்

திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள வேடசந்தூரில் தட்டாரப்பட்டி ஊராட்சித் தலைவரை செயல்படவிடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டுஎழுந்துள்ளது. வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது தட்டாரபட்டி ஊராட்சி. இதன் தலைவராக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சக்தீஸ்வரி பொறுப்புவகித்து வருகிறார். இவரது செயல்பாடுகளை தடுக்கும் விதமாக மற் றொரு சமூகத்தைச் சேர்ந்த வார்டுஉறுப்பினர் மாவீரன் செயல்பட்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது “தாம் தான் இந்த ஊராட்சியின் தலைவர்” என்று சொல்லிக் கொள்கிறாராம். காந்தி நகரில் இரும்புக் குழாய் அமைக்க முடிவெடுக்கப்பட்டது, மாவீரன் தலையிட்டு பிவிசி பைப்தான் போட வேண்டும் எனக் கூறியுள்ளார். கலைஞர் நகரில் தார் சாலை அமைக்கும் போதும் மாவீரன் தலையீடு செய்துள்ளார். ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி பணிகளை மேற்கொள்வதற்கு பதிலாக மாவீரன் தன்னிச் சையாக செயல்படுகிறார். இதுதொடர்பாக சக்தீஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இந்தநிலையில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சாவித்திரியின் கணவர் சுப்பிரமணி. சக்தீஸ் வரியை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தநிலையில் அருந்ததியர் சமூக ஊராட்சித் தலைவரின்செயல்பாட்டில் தலையிடுபவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வாலிபர் சங்கம், விடுதலைச் சிறுத்தைகள்உள்ளிட்ட தலித் அமைப்புகள் புதன்கிழமை வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.