tamilnadu

img

சிறுமி பாலியல் வன்கொலை வழக்கில் குற்றவாளி விடுதலை... மகளிர் நீதிமன்றத் தீர்ப்புக்கு மாதர் சங்கம் எதிர்ப்பு

திண்டுக்கல்:
சிறுமி பாலியல் கொலை வழக்கில் கொலையாளி விடுதலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாய் உள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் ஜி.குரும்பபட்டியில் 12 வயதுச் சிறுமியை கிருபானந்தம் (19) என்ற இளைஞரும் அவரது  நண்பர்கள் ஜெயபிரகாஷ், டார்வின் சிங் ஆகியோர்  சிறுமியை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்த னர். இதுதொடர்பாக வடமதுரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கிருபானந்தத்தை மட்டும் கைது செய்தனர்.இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில்  செவ்வாயன்று தீர்ப்பளிக்கப்பட்டது.  தீர்ப்பில், போதுமான சாட்சியம் இல்லை என்று கூறி கொலையாளி கிருபானந்தம் விடுதலைசெய்யப்பட்டார். தீர்ப்பைக் கேட்டதும் நீதிமன்ற வளாகத்திலேயே குழந்தையின் தாய் மயக்கமடைந்தார். தமது குழந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று அந்தத் தாய் கதறியழுதார். 

தீர்ப்பை கேட்டு அதிர்ச்சியும் ஆவேசமும் அடைந்த ஜனநாயக மாதர் சங்கத்தினர் நீதிமன்றம் முன்புஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத் தலை வர்கள் ஜி.ராணி, வனஜா, ஜானகி, ராஜேஷ்வரி மற்றும் லட்சமியின் உறவினர்கள் பங்கேற்றனர். 

மேல்முறையீடு செய்வோம்
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக மாதர் சங்கத்தலைவர்கள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் வனஜா, “இத்தீர்ப்பில் போதுமான சாட்சியம் இல்லைஎன்று நீதிபதி கூறியுள்ளார். இதேநீதிபதி 35 சாட்சிகளை விசாரித்துள் ளார். கொலையாளி கிருபானந்தம் தனது வாக்குமூலத்தில் நான்தான் பாலியல் வல்லுறவு செய்தேன் என்றுஒப்புக்கொண்டுள்ளான். இதற்கு மேல்என்ன சாட்சியம் வேண்டும்? நீதிபதியும், காவல்துறை அதிகாரியும் இந்த வழக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு அநீதியான தீர்ப்பினை அளித்திருக்கிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறோம்” என்று கூறினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.ராணி, தலைவர் எம்.ஜானகிஆகியோர் கூறுகையில், திண்டுக்கல்மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டு களாக 45க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். அவர்களில் ஆறு சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த தீர்ப்பு குழந்தைகளின் பாதுகாப்புக்கு எதிரானது. பாலியல் வன்கொலை குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கும், சிறுமிகளும் பெண்களும் மேலும் பாதிக்கப்படுவதற்கும் இத்தீர்ப்பு வழிசெய்கிறது. குற்றவாளிகளுக்கு நீதிமன்றமே பாதுகாப்பு அளிப்பது போன்ற தீர்ப்புகள் வருவது ஜனநாயகவிரோதமானது; இந்த வழக்கில் நீதிபதியும், காவல் அதிகாரிகளும்  நீதிபதியின் ஓய்வறையில் குற்றவாளியை நேரில் சந்தித்தது எங்களுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினர்.