tamilnadu

img

தோழர் என்.வரதராஜனின் நினைவு தினம் இன்று!

தோழர் என்.வரதராஜனின் நிலைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளரும், வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் தொகுதிகளின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற சிபிஎம் போராட்டத்திற்குத் தலைமையேற்று வழி நடத்தியவருமான தோழர் என்.வரதராஜனின் நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கே.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில், என்.வரதராஜனின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மூத்த தோழர்கள் பி.கே.கருப்புசாமி, வி.குமரவேல், எம்.ஆர்.முத்துசாமி ஆகியோர் தோழர் என்.வரதராஜனின் மக்கள் பணிகளை நினைவு கூர்ந்து பேசினர். மாநகர செயலாளர் அரபு முகமது நன்றி கூறினார்.