tamilnadu

img

தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் நினைவுதினம்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முதுபெரும் தலைவர் தோழர் ஏ.பி என்று அழைக்கப்பட்ட ஏ.பாலசுப்ரமணியத்தின் 40ஆவது நினைவு தினம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அவரது உருவச்சிலைக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், பி.ஆஸாத், அஜாய்கோஷ், வ.கல்யாணசுந்தரம், எம்.ஜானகி, சிஐடியு நிர்வாகிகள் கே.ஆர்.கணேசன், பிரபாகரன், ராம்குமார், உமாபதி, ஜான்போர்ஜியா, தனசாமி, தோல் பதனிடும் தொழிலாளர் சங்க கௌரவத்தலைவர் டி.ஸ்டாலின், சி.பி.ஜெயசீலன், தவக்குமார், மற்றும் ஜெய்லானி, மாலண்டோ, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத்தலைவர் ஏ.அரபுமுகமது, அடியனூத்து ஊராட்சித் தலைவர் ஜீவானந்தம், திண்டுக்கல் ஒன்றியக் கவுன்சிலர் செல்வநாயகம் உள்ளிட்டோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரை பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் பகுதியில் அவரது உருவப்படத்திற்கு பகுதிக்குழு செயலாளர் கா. இளங்கோவன், எஸ்.என்.நவாஸ், கிளைச் செயலாளர்கள் பாஸ்கர், பால்ராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

;