திண்டுக்கல்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், திண்டுக்கல் இலக்கியக் களத்தின் கூடுதல் பொருளாளருமான எம்.கிருஷ்ணன் ஞாயிறன்று காலமானார். திங்களன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
எம்.கிருஷ்ணன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, ஆர்.மனோகரன், நகர் செயலாளர் ஆஸாத், மூத்த தோழர் வி.குமரவேல், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராணி, பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜானகி, பாலச்சந்திரபோஸ், பாலாஜி, கட்சியின் இடைக்கமிட்டிசெயலாளர்கள் கந்தசாமி, சக்திவேல், திண்டுக்கல் நகர்க்குழு உறுப்பினர்கள் அரபு, கே.எஸ்.கணேசன், விஷ்ணு,ஒன்றியக் கவுன்சிலர் செல்வநாயகம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தலைவர்கள் ஜீவானந்தம், கேசவன்,வீரய்யா, சுரேஷ், இலக்கியக் களம் சார்பாக பேரா.மணிவண்ணன், சரவணண், ராதாகிருஷ்ணன், எஸ்.ராமமூர்த்தி, அரசு ஊழியர் சங்கம் சார்பாக மாவட்ட நிர்வாகிகள் முபாரக்அலி, சுகந்தி, மங்களபாண்டி, விஜயகுமார், நாராயணசாமி, ராஜேந்திரன் ஆகியோர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.