tamilnadu

img

தமுஎகச அமைப்பு தினக் கூட்டம்

ஈரோடு, ஜூன் 25- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் அமைப்பு தினம் ஈரோட்டில் கொண்டா டப்பட்டது.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை ஞர்கள் சங்கத்தின்  அமைப்பு தினமானது சங்கத்தின் ஈரோடு சூரம்பட்டி கிளை, மருந்து விற்பனைப் பிரதி நிதி கிளை மற்றும் புன்செய் புளியம்பட்டி கிளை சார்பில்  ஞாயிறன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்  பறையிசை முழக்கத்தோடு கூட்டங்கள் நடத்தப்பட்ட்டு. புதிய கல்விக் கொள்கை, இன்றைய அரசியல் சூழல், கலை இலக்கியத்தின் தாக்கம் ஆகியவை குறித்த விவாதங்கள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் ந.சின்னையன், செயலாளர் மு.சங்கரன்,  பொரு ளாளர் வீ.ராஜூ, வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சசி, மாவட்ட தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், தமுஎகச-வுடன் இணைந்து இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், மாணவர் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் ஈரோடு  பேருந்து நிலையம்,  ப.செ.பூங்கா போன்ற இடங்களில் தொடர்ந்து  புதிய கல்விக் கொள்கை யின் அபாயங்களை விளக்கும் வகையிலான ஆயிரம் துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.