திண்டிவனம், மே 18-சிறுவயதில் இருந்து தன் மீது பாசம் காட்டாமல் புறக்கணித்து தம்பியின் மீது பெற்றோர் அதிக பாசம் காட்டி முக்கியத்துவம் அளிப்பதாக நினைத்து தாய்-தந்தையை எரித்து படுகொலை செய்த வாலிபரையும், அவரது மனைவியையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுபற்றிய விபரம் வருமாறு:-விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவைச் சேர்ந்த ராஜூ இவரது மனைவி கலைச்செல்வி, கடைசி மகன் கவுதமன் ஆகியோர் கடந்த 15ஆம் தேதி காலை மூன்று மணியளவில் அறையில் உள்ள ஏசி வெடித்து உடல் கருகி மரணம் அடைந்ததாக திண்டிவனம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது.இது பற்றிய விசாரணையில் ஈடுபடுவதற்காக திண்டிவனம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரி, ஆய்வாளர்கள் சீனிபாபு, மற்றும் விஜி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப் பட்டன. இந்நிலையில் இறந்ததாகக் கூறப்பட்டவரின் உடலில் வெட்டுக் காயங்கள் இருந்ததை கண்டு பிடித்த காவல்துறையினர் ராஜீவின் மூத்த மகன் கோவர்தனன் (33) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கோவர்த்தனனும், அவரது மனைவி தீபாகாயத்திரியும் இணைந்து தாய், தந்தை, தம்பியை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ராஜீவின் மூத்த மகன் கோவர்தனன் முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்து ஆசிரியர் பயிற்சியை முடித்துள்ளார். திண்டிவனத்தில் கே.ஆர்.ஜி என்ற தனிப் பயிற்சி நிலையத்தை நடத்தி வந்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்படவே 2 கார்களை வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். இவரது தந்தை ராஜூ இவரது திருமணத்தை எளிமையான முறையில் நடத்தியதாகவும், ஆனால் அவரது தம்பி கௌதமன் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வந்ததாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோவர்த்தனன் கடந்த 14 ஆம் தேதி இரவு மூன்று பாட்டில்களில் பெட் ரோலை நிரப்பி அதன் வாயில் துணியை சுருட்டி வைத்து ராஜி, கலைச்செல்வி, கௌதமன் ஆகியோர் உறங்கியபின் பெட்ரோல் பாட்டிலால் அடித்து எரிய வைத்து கொலை செய்துள்ளார். இதில் அறையில் இருந்த ஏ.சி வெடித்ததாக நாடகமாடியுள்ளார். இதற்கு அவரது மனைவி தீபா காயத்ரியும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.ராஜீ தனது பெரியமகன் கோவர்தனனை சரியாக கவனிக்காமலும், அவரதுதம்பி கௌதமனை சிறுவயதில் இருந்தே செல்லமாக வளர்த்ததாகவும் அதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த கோவர்த் தனன் தனது மனைவி தீபாகாயத்திரியுடன் இணைந்து இக்கொலைகளை செய்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து இருவரும் சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டனர்.